பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் குறித்து ஐ.நா. பிரதிநிதி – நீதி அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்
பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்ச், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(03.09.2026) கொழும்பில் நடைபெற்றுள்ளது.
மறுசீரமைப்புத் திட்டங்கள்
இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் பணிகள் என்பன உள்ளடங்கலாக சட்ட ஆட்சி சார்ந்த மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்டோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.