இலங்கை அரசிடம் புதிய அறிக்கை ஊடாக ஐ.நா. மனித உரிமை ஆணையகம் விடுத்துள்ள கோரிக்கை
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் ஆற்றுப்படுத்தலை மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசிடம் புதிதாக வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை கோரியுள்ளது.
ஒக்டோபர் 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலப் பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கை ஊழலை எதிர்கொள்ளல், அரசியல் படுகொலைகள் தொடர்பாக உயர்மட்ட கைதுகள் மற்றும் புலன்விசாரணைகள், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் என்பனவை தொடர்பான நடவடிக்கைகளை கவனத்தில் எடுக்கின்றது.
இதே காலப்பகுதியில் இலங்கை டித்வா சூறாவளி மற்றும் உலகளாவிய எரிசக்தி விலையேற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட சவால்களையும் எதிர்கொண்டது.
நடவடிக்கை
நீண்ட கால சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பான உறுதிமொழி அளித்திருந்தாலும் இலங்கை அரசு தொடர்ந்தும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது என்றும், அது எதேச்சதிகார கைதுகளுக்கும் குற்றச்சாட்டின்றிய தடுத்துவைப்புக்களுக்கும் கொண்டு செல்லும் என்றும் அறிக்கை கூறுகின்றது.

இலங்கை தனது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைத் தீவிரப்படுத்துமாறும் குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், அந்தச் சட்டத்தை பயன்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதித்தல் மற்றும் அதன் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
மனித உரிமை மீறல்கள்
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்கள், அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையான முறையில் கையாளப்பட்டுத் தீர்க்கப்படும் வரை, அரசு, பாதுகாப்புத்துறை அல்லது இராஜதந்திரப் பணிகளில் உள்ள உயர் பதவிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.

பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் முயற்சிகளுக்கும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பதற்கும் அரசு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒன்பது நாட்களுக்குப் பிறகு... நேபாள நீர்மின் சுரங்கத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட இருவர் News Lankasri
பல நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களைச் சேமிக்க பிரித்தானியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் News Lankasri