தமிழர்களின் வலிகளை சுமந்த ஊழி திரைப்பட பாடல் வெளியீடு
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் ஊழி திரைப்படத்தின் பாடல் வெளியீடானது தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (08.05.2024) கிளிநொச்சி (Kilinochchci) மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த குறித்த திரைப்படம் எதிர்வரும் மே 10ஆம் திகதி 16 நாடுகளில் 70 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரைப்பட வெளியீடு
மேலும், இந்த திரைப்படமானது ஜோசப் ரஞ்சித்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ளது.
அதேவேளை, ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் கவி வரிகளில் உருவான பாடலுக்கு இந்திய பாடகர்களின் குரலிற்கு புதிய இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், பாடல் இறுவெட்டினை ஈழப்பாடகி பார்வதி சிவபாதம் மற்றும் ஈழ இசையமைப்பாளர் செயல்வீரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பாடல் ஆசிரியர் தீபச்செல்வன் உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் அனுபவ உரையாற்றினர்.
மேலும், முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சர், முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் : எரிமலை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |














Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
