ரஷ்யாவிற்கு உளவு பார்த்த உக்ரைன் உளவுத்துறை உயர் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
உக்ரைன் பாதுகாப்புப் படையின் பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னாள் தலைமை அதிகாரியான கர்னல் டிமிட்ரோ கோஸ்யுரா, ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி பாதுகாப்பு அமைப்பிற்கு உளவு பார்த்த குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் இராணுவத்தின் நடமாட்டங்கள், உக்ரைன் தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் முக்கிய கட்டமைப்பு விவரங்கள் போன்ற பாதுகாப்பு இரகசியங்களை ரஷ்யாவிற்கு பணத்திற்காக விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை
இது தொடர்பில், உக்ரைன் அரசுத் தலைமை வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ கருத்து தெரிவிக்கையில்,
உக்ரைன் இராணுவச் சின்னத்தை அணிந்துகொண்டு ரஷ்யாவிற்கு உளவு பார்ப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் நாட்டின் எதிரியாகவே கருதப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு இத்தகைய கடுமையான தண்டனையே பொருத்தமானது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டில் வியன்னா நகரில் வைத்து ரஷ்ய உளவு அமைப்பால் பணியமர்த்தப்பட்ட கோஸ்யுரா, 2024 டிசம்பருக்குப் பிறகு தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் பாதிப்புகள், பலியானவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களை அவர் தொடர்ந்து ரஷ்யாவிற்கு அனுப்பி வந்துள்ளார்.
"எலி" எனப் பெயரிடப்பட்ட உக்ரைன் உளவுத்துறையின் இரகசிய நடவடிக்கையின் மூலம், கீவ் நகரில் உள்ள ஒரு பதுங்கு மாளிகையிலிருந்து தனி உறைவிடம் மற்றும் தனி வைஃபை (Wi-Fi) வசதியைப் பயன்படுத்தி அவர் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரைக் கைது செய்வதற்கு முன்னதாகவே உக்ரைன் உளவுத்துறை அவரது கணினிகள் மற்றும் தொலைபேசிக் கண்காணித்து, அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பல தவறான உளவுத் தகவல்களை அனுப்பி ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டில் டெங்கு நோயாளர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை