கருங்கடலில் ரஷ்யக் கப்பல் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
கருங்கடலில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான அணுசக்தி நிறுவனமான 'ரோசாட்டம்' க்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
உறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்தக் கப்பல் மீதான தாக்குதலில், அதில் பயணம் செய்த 17 பணியாளர்களும் உயிர் பிழைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
இத்த தாக்குதலை 'கடற்கொள்ளை மற்றும் கடல்சார் கொள்ளை' என அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதனிடையே, எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்எஸ்கி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யக் கொடியின் கீழ் இயங்கிய 'யானினா' என்ற 100,000 டன்களுக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட அனுமதிக்கப்பட்ட ரஷ்யக் கொள்கலன் கப்பலே இவ்வாறு அழிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் போர் முயற்சிக்கு உதவுகின்றன எனக் கூறிவரும் கப்பல்கள் மீது கடந்த சில வாரங்களாகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.