மீண்டும் உக்ரைன் - ரஷ்யா இடையில் பேச்சுவார்த்தை
உக்ரைன் - ரஷ்யா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்- ரஷ்யா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்று முடிந்த நிலையில் ரஷ்யாவால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை பரிந்துரையை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஜெலன்ஸ்கியின் முன்னணி ஆலோசகர்
எனினும், ஜெலன்ஸ்கியின் முன்னணி ஆலோசகர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள உக்ரைன் தயாராக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறோம்.
இதன் அர்த்தம், ரஷ்யாவின் நிபந்தனையை பெறுவது முக்கியமானது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. நிபந்தனைக்கான வரைவை தயாரித்து அனுப்புவதற்கு போதுமான நேரம் உள்ளது” என கூறியுள்ளார்.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 15 மணி நேரம் முன்

இந்திய கடற்படை திறனை மேம்படுத்த ரூ.5,000 கோடி முதலீடு., 175 போர் கப்பல்களாக அதிகரிக்கும் இலக்கு News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
