ரஷ்ய படை மீது உக்ரைன் பதிலடி தாக்குதல்
ரஷ்ய (Russia) ஏவுகணைப் படை மீது உக்ரைன் (Ukraine) பதிலடி தாக்குதல் நடாத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யாவின் பயங்கர ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததோடு 119க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக உக்ரைன் இராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது.
பதிலடி தாக்குதல்
டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உக்ரைன் படைகள் ரஷ்ய இராணுவத்தின் 448ஆவது ஏவுகணைப் படையின் தளத்தை குறிவைத்து தாக்கியுள்ளனர்.

அத்துடன் அதில், "ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் 448ஆவது ஏவுகணைப் படையின் தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
, மேலும் வெடிமருந்துகளின் இரண்டாம் நிலையில் வெடிப்பு காணப்பட்டது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri