உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல்: தீப்பிளம்பாக பற்றியெரியும் கட்டடங்கள்
உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனை குறிவைத்து ரஷ்யா இன்று அதிகாலை சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ரஷ்யா இதுவரை இல்லாத அளவில், 158 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசித்தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள், உக்ரைன் கிரிமியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

தீப்பிளம்பாக பற்றியெரியும் கட்டடங்கள்
உக்ரைன் மீதான இந்த தாக்குதலில் 13 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யா, 122 ஏவுகணைகளையும், 36 ட்ரோன்களையும் கொண்டு தாக்கியுள்ளதாகவும், உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும், 27 ட்ரோன்களையும் வழிமறித்துத் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் இராணுவ தளபதியான Valerii Zaluzhnyi தெரிவித்துள்ளார்.
இந்த ரஷ்ய தாக்குதலில் கட்டடங்கள் தீப்பிளம்பாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரை தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்ட விஜயகாந்த்! கேப்டன் பிரபாகரன் தந்த மாபெரும் வெற்றி - சீமான்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri