இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ள பிரித்தானியா
இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக பிரித்தானியா (United Kingdom) இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) புதுப்பித்துள்ளது.
குறித்த பயண ஆலோசனையானது, லண்டனில் (London) உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் பிரித்தானிய அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய எதிர்வரும் ஏப்ரல் 05 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
ஜனவரி 01 மற்றும் மார்ச் 27இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாலிருந்து சுமார் 53,928 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இதற்கமைய, புதுப்பிக்கப்பட்டுள்ள பயண ஆலோசனையில், அவசரகால மருத்துவச் சேவைகளுக்கான அணுகல், பாதுகாப்புத் தேவைகள், வீதிப் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதிகளுக்கான அணுகல் போன்றவை குறித்த முந்தைய தகவல்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மேலும், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் இலங்கை தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தெளிவான புரிதலை ஏற்படுத்துவதற்காக, முன்னைய சுற்றுலா ஆலோசனையின் மூலம் வழங்கப்பட்ட தகவல்களை நீக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பிரித்தானியா மூன்றாவது பெரிய நாடாக உள்ள நிலையில் புதுப்பிக்கப்பட்ட சுற்றுலா ஆலோசனையானது இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய பங்காற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri