இலங்கையின் போர்க்குற்றங்கள் : நேரடி சாட்சிகளை அழைக்கும் இங்கிலாந்து பொலிஸார்

Tamils Sri Lanka England
By Sivaa Mayuri Jun 05, 2024 04:38 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையில் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் இங்கிலாந்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர், தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடைபெற்று வரும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இரண்டாவது நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொமாண்டர் டொமினிக் மர்பி (Commander Dominic Murphy) தெரிவித்துள்ளார்.

மின்சார சட்டமூல நிபுணர்களை விமர்சிக்கும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

மின்சார சட்டமூல நிபுணர்களை விமர்சிக்கும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

சாட்சியங்கள் 

தமது விசாரணையின் ஒரு பகுதியாக தற்போது இரண்டு பேரை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த மிகக் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரிகளின் முன்னேற்ற செயற்பாடுகளின் அடையாளமாக இது கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அனைத்து தீவிரமான வழக்குகளைப் போலவே, வழக்கைத் தொடர்ந்து கட்டமைக்க முடிந்தவரை நேரில் பார்த்த சாட்சியங்கள் தேவை.

uk-police-call-direct-witnesses-war-crimes

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நடந்த இந்த சம்பவங்கள் குறித்து இதுவரை தெரிவிக்கப்படாத தகவல்களை கொண்டிருப்பவர்கள், பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு இங்கிலாந்து பொலிஸார் கோரியுள்ளனர்.

விசாரணைக்கு உதவக்கூடிய நேரடித் தகவல்களைக் கொண்டிருக்கும் எவரிடமிருந்தும் குறிப்பாக 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் அல்லது அந்த நேரத்தில் இலங்கையில் வசித்த உறவினர்கள் அல்லது நண்பர்களைக் கொண்டிருந்தவர்கள் இந்த தகவல்களை வழங்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

போர்க் குற்றங்கள்

தகவலை வழங்க, போர் குற்றங்கள் குழுவிற்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்பவும் SO15Mailbox.WarCrimesTeam@met.police.uk. அல்லது +44 (0)800 789 321 என்ற இலக்கங்களின் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதியன்று தெற்கு லண்டனில் உள்ள முகவரியில் 60 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

uk-police-call-direct-witnesses-war-crimes

எனினும், இவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசியல் பேரணியின் போது இரண்டு பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2000ஆம் ஆண்டு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் (Mylvaganam Nimalarajan) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் 48 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரண்டு சம்பவங்களும் 2017ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு போர்க் குற்றங்கள் குழுவிற்கு செய்யப்பட்ட குற்றங்களாகும். இந்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இங்கிலாந்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் காலநிலை மாற்றத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு: தொடரும் அபாய எச்சரிக்கை

இலங்கையில் காலநிலை மாற்றத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு: தொடரும் அபாய எச்சரிக்கை

அரச நிறுவனங்களில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

அரச நிறுவனங்களில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US