தலிபான் படைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க இராணுவத்தளபதி
ஆப்கானிஸ்தானில் தாலிபன் படைகள் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் நிலையில் அமெரிக்க இராணுவ கூட்டுப்படைகளின் தலைவர் மார்க் மில்லே(Mark Milley) தலிபான் படைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஆட்டம் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் கருத வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 212 மாவட்டங்களைக் கைப்பற்றி விட்டதாக தாலிபன் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் மில்லே(Mark Milley), மொத்தம் உள்ள 419 மாவட்டங்களில் பாதியைத் தான் தாலிபன் கைப்பற்றியது என்றும் ,34 மாகாணத் தலைநகர்களில் ஒன்று கூட தாலிபன் வசம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பக்ரீத்தை முன்னிட்டு வன்முறைகள் தணிந்திருப்பதாகவும் அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 1 மணி நேரம் முன்

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri

உலகம் முழுவதும் வசூலில் புதிய சாதனை படைத்த கமல்ஹாசனின் விக்ரம்- போட்றா வெடிய கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam
