தலிபான் படைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்க இராணுவத்தளபதி
ஆப்கானிஸ்தானில் தாலிபன் படைகள் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் நிலையில் அமெரிக்க இராணுவ கூட்டுப்படைகளின் தலைவர் மார்க் மில்லே(Mark Milley) தலிபான் படைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஆட்டம் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் கருத வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 212 மாவட்டங்களைக் கைப்பற்றி விட்டதாக தாலிபன் பிரச்சாரம் செய்து வருகின்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் மில்லே(Mark Milley), மொத்தம் உள்ள 419 மாவட்டங்களில் பாதியைத் தான் தாலிபன் கைப்பற்றியது என்றும் ,34 மாகாணத் தலைநகர்களில் ஒன்று கூட தாலிபன் வசம் இல்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பக்ரீத்தை முன்னிட்டு வன்முறைகள் தணிந்திருப்பதாகவும் அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri