சதிகளைத் தாண்டி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது: க.சுகாஷ்
அரச புலனாய்வாளர்களால் இயக்கப்படுபவர்களின் சதிகளைத் தாண்டி தியாக தீபம் திலீபன் நினைவுகூரப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கையில் நேற்று (26.09.2022) அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும்,
சதிகாரர்களின் முகமூடிகள் கழன்றுள்ளன. இந்த நிலையில் பொய் செய்திகளைப் பரப்புவதில் அரச ஆதரவு ஊடகங்கள் தீவிரமாக செயற்படுகின்றன.
தமிழ்த் தேசிய வரலாறுகள்
இதன்போது மக்களுக்கு உண்மையை உரைக்க சகல விடயங்களும், ஆதாரங்களும் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.
தமிழ்த் தேசிய வரலாறு கடத்தப்படுவதை எவராலும் தடுக்கவோ நிறுத்தவோ முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.