முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் தியாகதீபம் திலீபன் நினைவு நாள்!
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினைவிற்கொள்ளப்படவுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைக்கப்பட்ட பந்தலில் (26.09.22) நாளை காலை 9.00 மணிக்கு திலீபனின் நினைவு படத்திறகு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளது.
வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்படல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் நினைவவேந்தல் நிகழ்வு இம் முறையும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு நாளை காலை திலீபனுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
35ம் ஆண்டு நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 35ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உடையார்கட்டு மண்ணில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9:00மணிக்கு ஆரம்பமாகும் பொதுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதால் தாயக மக்கள் அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
