மாணவியின் தங்கச்சங்கிலியை அறுத்து தப்பி சென்ற இரு இளைஞர்கள் - விசாரணை முன்னெடுப்பு
முள்ளியவளையில் உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் நேற்றையதினம்(05.05.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளைக்கு துவிச்சக்கர வண்டியில் வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை இலக்கத்தகடு இன்றி விலைகூடிய NS ரக மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள் குறித்த மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்களை கண்டறியும் முயற்சி
இதே பகுதிக்கு அண்மித்த பகுதியில் கடந்த வாரமும் கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.
இதனால், தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் குறித்து பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவருகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை கண்டறியும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நிழற்குடைகள் மற்றும் வீதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் திரியும் நபர்கள் மீது பொலிஸார் தீவிர ரோந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri