புத்தாண்டு விருந்தில் திடீரென உயிரிழந்த இருவர்
அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மதுபான விருந்தில் கலந்து கொண்ட 3 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செனவிரத்ன மற்றும் லொக்கு பண்டார என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மதுபானம் அருந்திருக் கொண்டிருந்த மூவரும் திடீரென மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை வைத்தியசாலை அழைத்து சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மற்றைய ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் விஷமாகியதால் உயிரிழப்பு ஏற்பட்டதா என பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
