புத்தாண்டு விருந்தில் திடீரென உயிரிழந்த இருவர்
அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு விருந்தில் கலந்து கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
மதுபான விருந்தில் கலந்து கொண்ட 3 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செனவிரத்ன மற்றும் லொக்கு பண்டார என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மதுபானம் அருந்திருக் கொண்டிருந்த மூவரும் திடீரென மயக்கமடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை வைத்தியசாலை அழைத்து சென்றுள்ளனர். எனினும் செல்லும் வழியிலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மற்றைய ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் விஷமாகியதால் உயிரிழப்பு ஏற்பட்டதா என பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam