கம்பஹாவில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது
கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றல்
இவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயர்கல்வி கற்கும் இளைஞர்கள் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், இவர்களுக்குப் பின்னால் உள்ள போதைப்பொருள் விநியோக வலையமைப்பு குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம்! இலங்கையிலிருந்து வெளியேற தடுமாறும் வெளிநாட்டவர்களுக்கு அவசர அறிவிப்பு
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri