கொழும்பில் சிக்கிய கோடிக்கணக்கான போதைப்பொருள்
தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது முச்சக்கரவண்டியில் ஐஸ் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட போது ஒருகொடவத்த 'சப்பா' என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி பொரளை சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது பிரதான சந்தேகநபரிடம் இருந்து 1580 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri