முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு இரண்டு பொலிஸ் பிரிவால் தடை உத்தரவு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்த வேண்டாம் எனக் கோரி இரண்டு பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாகரைப் பொலிஸ் பிரிவினரும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவினரும் இணைந்து திங்கட்கிழமை இரவு வாழைச்சேனை விபுலானந்தர் வீதியில் உள்ள வீட்டிற்கு வருகை தந்து குறித்த தடையுத்தரவை வழங்கி வைத்தனர்.
அத்தோடு ஞாயிற்றுக்கிழமை இரவு வாழைச்சேனை பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டது.
இதன்படி தனக்கு இரண்டு பொலிஸ் பிரிவினரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.