10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
மாத்தளை - மஹாவெல பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது நபர் ஒருவரிடம் 10,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து கடமை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த பிரதேசத்தின் போக்குவரத்து கடமையின் போது வருமான அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி சான்றிதழ் இன்றி வாகனம் செலுத்திய நபருக்கு அபராதப்பத்திரம் குறைந்த தொகையில் வழங்குவதாக கூறி இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் 10,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
