தென்னிலங்கையில் கோரம்: கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை
களுத்துறை - மத்துகம பகுதியில் கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவமானது இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய எம்.கலன என பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த குறித்த நபர் களுத்துறை - நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan