நபரொருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த முயன்ற இருவர் கைது
நபரொருவர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, வெல்லம்பிட்டிய-சேதவத்த பிரதேசத்தில் வைத்து நேற்று (4.10.2022) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூடு

இவர்கள் கடந்த 28ஆம் திகதி கிராண்ட்பாஸ் புதிய களனி பாலத்திற்கு அருகில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நபரொருவரைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கை

சந்தேகநபர்களிடம் இருந்து ரிவால்வர் ரக துப்பாக்கி, இலக்கத்தகடு மாற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
29 மற்றும் 32 வயதுடைய சந்தேகநபர்கள் அளுத்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam