அம்பாறையில் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
அம்பாறை- நிந்தவூரில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடையாளம் காணப்பட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனை செய்பவர்களின் வீடுகள் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய விசேட தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மேலதிக விசாரணை
இதன் போது ஐஸ் போதைப் பொருள் , இலத்திரனியல் தராசு , 893840 ரூபா பணத்துடன் , 29 வயது மதிக்கத்தக்க பெண் , 22 வயது மதிக்கத்தக்க ஆண் சந்தேக நபர்கள் கைதாகினர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan