அம்பாறையில் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
அம்பாறை- நிந்தவூரில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (15) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடையாளம் காணப்பட்ட போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனை செய்பவர்களின் வீடுகள் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் பணிப்புரைக்கமைய விசேட தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மேலதிக விசாரணை
இதன் போது ஐஸ் போதைப் பொருள் , இலத்திரனியல் தராசு , 893840 ரூபா பணத்துடன் , 29 வயது மதிக்கத்தக்க பெண் , 22 வயது மதிக்கத்தக்க ஆண் சந்தேக நபர்கள் கைதாகினர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam