இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: மூவர் படுகாயம்
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (28) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஹொரவ்பொத்தானை -100 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் மஹதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri