மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இரு இந்தியர்கள் கைது
இந்தியாவில் (India) இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசா மூலம் வருகை தந்து சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட சகோதர்கள் இருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நடவடிக்கை நேற்று (30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று மாலை மட்டக்களப்பு ஏறாவூர் - தளவாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
சுற்றுலா விசா
இதன்போது, அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் தமிழ்நாடு - மதுரையைச் சேர்ந்த குறித்த இருவரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த 38 வயதுடைய பெண் மற்றும் அவரின் சகோதரரான 51 வயதுடைய நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த ஜூன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri