பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவி வீடொன்றின் ஒரே அறையிலிருந்து சடலங்களாக மீட்பு
காலி - ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பகுதியிலிருந்த வீடொன்றிலிருந்து, பிரிந்து வாழ்ந்து வந்த கணவன் மற்றும் மனைவி சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொரகீன பகுதியில் வசித்துவந்த 39 வயதுடைய ஆணொருவரும், 38 வயதுடைய பெண்ணொருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வீட்டின் அறையொன்றின் கட்டிலில் கையில் பூச்செண்டுடன் பெண்ணின் சடலம் காணப்பட்டுள்ளதுடன், அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் கணவன், மனைவி எனவும், இவர்கள் விவாகரத்து பெற்று சுமார் ஐந்து வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam