சிறுவர் பராமரிப்பு நிலையத்திலிருந்து இருவர் தப்பியோட்டம்!
களுத்துறை, கொஹொலான பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த சிறுவர் இருவரும் சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கழிவறைக்குச் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
