யாழில் கேரளக் கஞ்சாவுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) மீசாலை பகுதியைச் சேர்ந்த இருவர் 213 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை 51வது படைப்பிரிவு இராணுவ முகாமைச் சேர்ந்த புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (11) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சாவகச்சேரி - மீசாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது நடவடிக்கையின்போது 213 கிலோ 800 கிராம் எடையுடைய கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சான்றுப் பொருட்களுடன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
