கிளிநொச்சியில் கசிப்புடன் இருவர் கைது!
தர்மபுரம்- குமாரசாமிபுரத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குமாரசாமிபுரம் பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் பகுதியில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தி
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், 80 லிட்டர் கசிப்பு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இறந்த பின்னர் இப்படிதான் இருக்கும் - இறந்து 8 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த பெண் கூறிய விடயம் News Lankasri

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவி-ல் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? Cineulagam
