யாழ். தையிட்டியை நோக்கி படையெடுக்கும் தென்னிலங்கைவாசிகள்! களத்தில் இருப்பவர்கள் கடும் சீற்றம்
யாழ். தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரையை இனவாதிகள் தங்களுடைய தேவைக்காக பயன்படுத்தும் நோக்கில் கொழும்பிலிருந்து பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருவதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சிங்கள ராவய என்ற அமைப்பு தமிழ் மக்களினுடைய அனைத்து நிகழ்வுகளையும் தடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திஸ்ஸ விகாரையில் பொசன் போயா தினமான இன்றையதினம்(10) தமிழ் மக்களால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மதுபாசனன் என்ற நபர் உட்பட பலர் இந்த இடத்திற்கு வருவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சமூக செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.
மேலும், தமிழ் மக்களிடையே இனக் கலவரத்தை உண்டு பண்ணி அதன் மூலம் பலர் அரசியல் இலாபம் காண முயற்சிப்பதாகவும் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        