ஹொரணையில் கோர விபத்து! தூக்கி வீசப்பட்ட சாரதிகள்
ஹொரணை - வாகவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது எதிர் திசையில் இருந்து வந்த கார் மோதியதில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு விழுந்தமை அருகில் உள்ள சிசிரிவி கருவியில் பதிவாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விபத்தில் காயமடைந்த காரின் ஓட்டுநர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri
