செட்டிகுளம் பொலிஸாரால் இருவர் கைது!
வவுனியா, செட்டிகுளம் - நேரியகுளம் பகுதியில் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இருவரை செட்டிகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இன்று செட்டிகுளம் பொலிசாரால் நேரியகுளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகயின் போது 100 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு நபர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.