காலியில் நாயை அடித்துக் கொன்ற இருவர் கைது
வீதியில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்றை அரக்கத்தனமாக அடித்துக் கொன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி (Galle), அக்மீமன பொலிஸ் நிலையத்தின் அதிகார வரம்புக்குட்பட்ட பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்
வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து இறங்கிய நபரொருவர், வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த நாய் ஒன்றை தடியால் அரக்கத்தனமாக தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே இருந்த கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.யில் குறித்த காணொளிக்காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் குறித்த காணொளிக் காட்சியில் காணப்பட்ட முச்சக்கர வண்டியின் இலக்கத்தைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை காலி, அக்மீமன பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் என்று தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவருக்கும் எதிராக மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
