வட்டி வருமானத்தின் பெறுமதி! மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு
பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே மக்கள் வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கின்றார்கள்.
ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாம்.
எனினும், இலங்கையில் வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர். எனினும் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
