கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட புலம்பெயர் சிறுமியின் வழக்கில் புதிய திருப்பம்!
கனடாவில் கொடூரமாக சுட்டுகொல்லப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமியின் வழக்கில் புதிய திருப்பமொன்று ஏற்பட்டுள்ளது.
ஜமைக்காவை சேர்ந்தவர் Taffash Riley எனும் (14) வயதுடைய புலம்பெயர்ந்த சிறுமியொருவர் கடந்த 1ஆம் திகதி சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது குடும்பத்தாருடன் கடந்த 2012ல் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி இரவு 9 மணியளவில் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது மர்மமான முறையில் சுட்டுகொல்லப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வந்த நிலையில், அதில் தொடர்புடைய 19 வயது இளைஞரான Michael Moncherry-Desir என்பவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கில் புதிய திருப்பமாக இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தெரியும் என கூறப்பட்ட நிலையில், அதனை குடும்பத்தார் மறுத்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றமைக்கான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் தெளிவாகாத நிலையில், தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றதுடன், விரைவில் மர்மத்தின் முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri