கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட புலம்பெயர் சிறுமியின் வழக்கில் புதிய திருப்பம்!
கனடாவில் கொடூரமாக சுட்டுகொல்லப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமியின் வழக்கில் புதிய திருப்பமொன்று ஏற்பட்டுள்ளது.
ஜமைக்காவை சேர்ந்தவர் Taffash Riley எனும் (14) வயதுடைய புலம்பெயர்ந்த சிறுமியொருவர் கடந்த 1ஆம் திகதி சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது குடும்பத்தாருடன் கடந்த 2012ல் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி இரவு 9 மணியளவில் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது மர்மமான முறையில் சுட்டுகொல்லப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வந்த நிலையில், அதில் தொடர்புடைய 19 வயது இளைஞரான Michael Moncherry-Desir என்பவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கில் புதிய திருப்பமாக இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தெரியும் என கூறப்பட்ட நிலையில், அதனை குடும்பத்தார் மறுத்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றமைக்கான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் தெளிவாகாத நிலையில், தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றதுடன், விரைவில் மர்மத்தின் முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri