கனடாவில் கொடூரமாக கொல்லப்பட்ட புலம்பெயர் சிறுமியின் வழக்கில் புதிய திருப்பம்!
கனடாவில் கொடூரமாக சுட்டுகொல்லப்பட்ட புலம்பெயர்ந்த சிறுமியின் வழக்கில் புதிய திருப்பமொன்று ஏற்பட்டுள்ளது.
ஜமைக்காவை சேர்ந்தவர் Taffash Riley எனும் (14) வயதுடைய புலம்பெயர்ந்த சிறுமியொருவர் கடந்த 1ஆம் திகதி சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது குடும்பத்தாருடன் கடந்த 2012ல் கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி இரவு 9 மணியளவில் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது மர்மமான முறையில் சுட்டுகொல்லப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வந்த நிலையில், அதில் தொடர்புடைய 19 வயது இளைஞரான Michael Moncherry-Desir என்பவரை கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கில் புதிய திருப்பமாக இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் தெரியும் என கூறப்பட்ட நிலையில், அதனை குடும்பத்தார் மறுத்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றமைக்கான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் தெளிவாகாத நிலையில், தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றதுடன், விரைவில் மர்மத்தின் முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
