காலிமுகத்திடலில் நடந்த கொடூரம்..! கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை
காலிமுகத்திடல் கடலுக்கு நீராடச் சென்ற நிலையில் காணாமல் சிறுவர்களில் ஒருவரின் சடலம் இன்று(11.06.2026) கரையொதுங்கியுள்ளதுடன், பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பும் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற 6 சிறுவர்கள் நேற்று (10.06.2026) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சிறுவனின் சடலம் இன்று மீட்பு
இவர்களில் 05 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மீட்கப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் இன்று(11.06.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று வீசி வருவதால் கடலுக்கு செல்லும் பொதுமக்கள் சற்று அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ் மண் வாசனையை உலகெங்கும் படைப்புகளால் கொண்டு சேர்த்த பாரதிராஜாவுக்கு இலங்கை மக்கள் ஆழ்ந்த இரங்கல்