இதை முன்பே செய்திருக்க வேண்டும்..! ஈரானின் புதிய தலைமையினருடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த ட்ரம்ப்
ஈரானின் புதிய தலைமையினர் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும், அதற்கு தாம் சம்மதித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதை அவர் ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் புதிய தலைமையினர்
“அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் பேச சம்மதித்துள்ளேன். எனவே அவர்களுடன் பேசுவேன். அவர்கள் இதை முன்பே செய்திருக்க வேண்டும்.

மிகவும் நடைமுறைக்கு ஏற்றதும் எளிதாகச் செய்யக்கூடியதுமான ஒன்றை முன்பே வழங்கியிருக்க வேண்டும். அவர்கள் மிகவும் தாமதமாக காத்திருந்தார்கள்,” என்று அவர் தனது ஃப்ளோரிடா இல்லத்திலிருந்து அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப், தாம் யாருடன் பேசப் போகிறார் என்பதை குறிப்பிடவில்லை. மேலும் அது எப்போது நடைபெறும் என்பதையும் அவர் விளக்கவில்லை.
சமீபத்தில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த சிலர் இனி உயிருடன் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மிகவும் பெரிய தாக்குதல்
“அந்த மக்களில் பெரும்பாலானோர் இப்போது இல்லை. நாங்கள் தொடர்பில் இருந்த சிலரும் இல்லை, ஏனெனில் அது ஒரு பெரிய தாக்குதல் — மிகவும் பெரிய தாக்குதல்,” என்று அட்லாண்டிக் இதழின் எழுத்தாளர் மைக்கேல் ஷெரருக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இதை முன்பே செய்திருக்க வேண்டும், மைக்கேல். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்து இருக்கலாம். முன்பே செய்திருக்க வேண்டும். அவர்கள் மிகவும் சிக்கலான முறையில் நடந்துகொண்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தாம், நீதித்துறைத் தலைவர் மற்றும் சக்திவாய்ந்த காப்பாளர் கவுன்சிலின் (Guardians Council) ஒருவரைக் கொண்ட தலைமைக்குழு, அயத்துல்லா அலி காமெனெய் மரணித்ததைத் தொடர்ந்து உச்சத் தலைவரின் பொறுப்புகளை தற்காலிகமாக ஏற்றுள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
அலிகமெனியின் இறப்பை உறுதிப்படுத்திய ட்ரம்ப்! தீய மனிதர்களில் ஒருவரான கமேனி இறந்துவிட்டார் - அதிரடி அறிவிப்பு
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri