பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள்

Sri Lanka Police Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Death
By Aanadhi Jul 17, 2026 12:25 PM GMT
Report

மர்மமான முறையில் இன்று(17) காலை உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன தீபால் விக்ரமரத்ன பல நீதிமன்ற நடவடிக்கைகளில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது உத்தியோகப்பூர்வ தகுதியில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாகவோ அல்லது பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் காரணமாகவோ பல்வேறு சட்ட நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தனது பதவிக்காலத்தில் அவர் எந்தவொரு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளும் இன்றிப் பணியாற்றியதாகக் குறிப்பிடப்படுகின்றது.

பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை

பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை

சர்ச்சைக்குரிய பதவி உயர்வுகள்

தேசபந்து தென்னக்கோன் போன்ற பிற்கால பொலிஸ் மா அதிபர்கள் மீது சுமத்தப்பட்டதைப் போன்ற பெரிய தனிப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் விக்ரமரத்ன மீது பதிவாகவில்லை. 

பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள் | C D Wickramaratne Named As Defendant Several Cases

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரிக்கப்பட்ட வழக்கில், சி.டி. விக்ரமரத்ன ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் விருப்பத்துக்கு இணங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் முன்னாள் ஷானி அபேசேகர, அவரது இடைநீக்கத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உட்பட பல அடிப்படை உரிமை மனுக்களில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருந்தார்.

பொலிஸ் மா அதிபர் என்ற முறையில், பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பல்வேறு நிர்வாக முடிவுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் பலமுறை நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டியிருந்தது.

2020ஆம் ஆண்டில் பல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு (SSPs) சர்ச்சைக்குரிய வகையில் முன்திகதியிட்டு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் காரணமாக, பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சி. டி. விக்ரமரத்ன மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தவறான நியாயப்படுத்தல்களையும், பிற அதிகாரிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் கருத்தில் கொண்டு, அந்தப் பதவி உயர்வு ஆணைகளை இடைநிறுத்தம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

இது ஆளும் தரப்பினரைத் திருப்திப்படுத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி சி.டி.விக்கிரமரத்ன மேற்கொண்ட மோசடி மற்றும் தவறான முன்னுதாரணங்களில் ஒன்றாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..

ஊழல், மோசடி முறைகேடுகள்

2022 மே 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகை அருகே போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது, வன்முறைக் ​​கும்பலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொலிஸ் நடவடிக்கை மற்றும் ஆணைகள் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்ன, விசேட அதிரடிப்படை (STF)கட்டளைத் தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) வருண ஜயசுந்தர ஆகியோரிடம் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) 2025-ஆம் ஆண்டில் விசாரணை நடத்தியது.

இருப்பினும், அந்த விரிவான விசாரணைகளுக்குப் பிறகு அரசியல் அழுத்தம் காரணமாக சி.டி. விக்ரமரத்ன மீது பகிரங்கமாக எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள் | C D Wickramaratne Named As Defendant Several Cases

ஆனாலும் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் அவரது அலுவலகத்தில் இருந்து கண்ணுக்கெட்டும் தூரத்தில் அமைந்திருந்த காலிமுகத்திடலில் அப்பாவிப் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக் கும்பலின் வெறியாட்டம் பல மணிநேரம் நீடித்திருந்த நிலையிலும் அதனைக் கட்டுப்படுத்த தனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தவில்லை.

அதற்குப் பதிலாக வன்முறைக் கும்பலுக்கு மறைமுகமாக ஒத்தாசை வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

விக்ரமரத்னவின் பதவிக்காலத்தில் ஓய்வு பெறும் வயதைத் தாண்டி அவர் பலமுறை பதவி நீட்டிப்பு பெற்றதும், அவரது மூன்றாவது பதவி நீட்டிப்பு அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டதும் அரசியல் மற்றும் சட்டரீதியான விவாதங்களைத் தூண்டியுள்ளன.

அவர் சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவியில் பணியாற்றியுள்ளார் என்பதும் இதில் அடங்கும். ஊழல், மோசடி முறைகேடுகளுக்காக அவர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்றபோதும், அதிகார துஷ்பிரயோக சம்பவங்கள் பலவற்றில் அவர் தொடர்புபட்டிருந்தார்.

சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக

இவருடைய பதவிக்காலத்தில் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பல்வேறு தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேகப் பாதையில் வெடிகுண்டுகளை ஏற்றிச் சென்ற சஹ்ரான் ஹாசிமின் கும்பலை பொலிஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்ய முயன்றபோது அப்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலையிட்டு அவர்களை விடுதலை செய்வித்திருந்தார்.

பல வழக்குகளில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட சி.டி. விக்ரமரத்ன : வெளிவரும் தகவல்கள் | C D Wickramaratne Named As Defendant Several Cases

அது தொடர்பில் பின்னர் வந்த பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் சி.டி. விக்ரமரத்ன எந்தவொரு விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.

அதற்குப் பதிலான தன்னுடைய பதவிக்காலத்தில் தேசபந்து தென்னகோனுக்கு முக்கிய பொறுப்புகள் பலவற்றை வழங்கியிருந்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான புலஸ்தினி மகேந்திரன் (சாரா ஜெஸ்மின்) என்பவர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், சாரா ஜெஸ்மின் உயிரிழந்து விட்டதாக காட்டுவதற்கு கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்த சகல நடவடிக்கைகளுக்கும் சி.டி.விக்ரமரத்ன முழு ஒத்துழைப்பும் வழங்கியிருந்தார்.

அம்பாறை புத்தங்கல பொதுமயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதல் இரண்டு மரபணு (DNA) பரிசோதனைகளிலும் சாரா ஜெஸ்மின் உடைய மரபணுவுடன் ஒத்துப் போகும் எந்தவொரு சான்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் சாரா ஜெஸ்மின் இறந்து விட்டதாக காட்டும் நோக்கில் கடந்த 2022 ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்றாவது மரபணு பரிசோதனைக்கான உத்தரவுகளை சி.டி. விக்ரமரத்னவே பிறப்பித்திருந்தார்.

குறித்த மரபணு பரிசோதனையில் ஆச்சரியப்படும் வகையில் சாரா ஜெஸ்மினின் மரபணு மாதிரியுடன் ஒத்துப்போகும் எலும்புத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....

நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....

ரகித ராஜபக்ச மற்றும் சரித உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரகித ராஜபக்ச மற்றும் சரித உள்ளிட்ட மூவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 17 July, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US