முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாகச் சிந்திப்பார்கள்..! ட்ரம்பின் ட்ரூத் சோசியல் பதிவு
அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக ஈரானின் அணு மிரட்டலை முழுமையாக அழிக்கும் வரை எண்ணெய் விலை குறுகிய காலம் உயர்ந்தாலும் அது மிகச் சிறிய விலை தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூகவலைத்தளமாக ட்ரூத் சோசியலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அதிகரித்த எண்ணெய்
அவர் “அதிகரித்த எண்ணெய் விலை இறைவனை மறைத்து விடும் போது விரைவாக வீழும், இது அமெரிக்காவிற்கும், உலகத்திற்கும், பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஒரு மிகவும் சிறிய செலவு தான். முட்டாள்கள் மட்டுமே வித்தியாசமாகச் சிந்திப்பார்கள்!” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கின் போர் பதற்றத்தின் மத்தியில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் மாறி வரும் நிலையில் ட்ரம்பின் இந்த பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.