டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் விசாரணை
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைதொடங்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி தொடங்கவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உடன் தொடர்பில் இருந்தமையை மறைப்பதற்காக அவருக்கு பணம் வழங்கியதாக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குடியரசு கட்சிக்கு பின்னடைவு
தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டொனால்ட் ட்ரம்ப் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு $130,000 டொலர்கள் பணம் செலுத்தியதை மறைப்பதற்காக 34 வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் மீது இவ்வாறான குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri