அர்ஜுன் மகேந்திரனை அழைத்து வருவதில் சிக்கல்!
மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri