திருக்கோணேஸ்வர ஆலயம் தொடர்பான செய்தியை மறுக்கும் இலங்கை அரசாங்கம்

Trincomalee S Shritharan Sarath Weerasekara Vidura Wickramanayaka Sri Lanka Government
By Sivaa Mayuri Sep 23, 2022 07:09 AM GMT
Report

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்க  நாடாளுமன்றில் உரையாற்றும்போது, இதனை குறிப்பிட்டார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் தாம் நேரடியாக சென்று கோயிலின் நிர்வாகத்தினருடன் பேசப்போவதாக அமைச்சர் தெரிவித்தார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத்தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன்   ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தார்.

அபகரிக்கப்படும் திருகோணேஸ்வர காணி

திருக்கோணேஸ்வர ஆலயம் தொடர்பான செய்தியை மறுக்கும் இலங்கை அரசாங்கம் | Trincomalee Thirukoneswara Temple

இதன்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை கொண்டிருந்த திருக்கோணேஸ்வரம் இன்று 18 ஏக்கர் காணியை மாத்திரமே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

காசிக்கும், திருப்பதிக்கும் செல்கின்ற அரசியல்வாதிகள் அதே சிவபெருமான் வீற்றிருக்கும் திருகோணேஸ்வர காணியை அபகரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

இந்த தெய்வ நிந்தனையே நாடு வீழ்ச்சி நிலைக்கு சென்கின்றமைக்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன், இந்த விடயத்தில் உரிய தீர்வு காணப்பட்டு இந்து மக்களுக்கு நியாயம் பெற்றுத்தரப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒத்திவைப்பு விவாதத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, திருகோணேஸ்வரம் கோயில் காணியில் வியாபாரத்தளங்கள், அமைக்கப்படவில்லை.

மாறாக அவை, தொல்லியல் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர், கோயில் நிர்வாக சபையுடன் கலந்தாலோசித்து, அவர்களின் இணக்கத்துடனேயே இந்த வியாபாரத்தளங்கள் அமைக்கப்பட்டதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

திருக்கோணேஸ்வர பிரதேசத்தில் பௌத்த அடையாளங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதனை, இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்ற முனைகின்றனர் என்று அவர் குற்றம் சுமத்தினார். 

இதேவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண ஆளுநர் கோயில் நிர்வாகசபையை அழைத்து, ஆலோசனைக்காக அல்ல. அறிவுறுத்தலுக்காகவே அழைத்ததாக கூறியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த வியாபாரத்தளங்களை நிரந்தரமாகவே அமைத்துக்கொடுக்கப்போவதாக ஆளுநர் தெரிவித்துள்ளதாக கருணாகரம் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கக் காலங்களில் பல இனவாதிகள் இருந்துள்ளனர். எனினும்; தமிழர்களுக்கு எதிரான முக்கிய இனவாதிகளாக கடந்த காலங்களில் செயற்பட்ட கே.எம்.பி ராஜரட்ன, ஆர்.ஜி சேனாநாயக்க, சிறில் மெத்யூ ஆகிய மூவரையும் இணைத்த ஒருவராக சரத் வீரசேகர செயற்படுவதாக கூறினார்.

இந்தநிலையில் ஒத்திவைப்பு விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் விதுர விக்;கிரமநாயக்க, நாடு இன்னும் பிரிந்து செயற்படுவதாக குறிப்பிட்டார்.

ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட நகன்களை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர். ஓவ்வொருவரும் வரலாறுகளை தெரிவிக்கின்றனர்.

எனினும் வரலாறுகளை பற்றி சிந்திக்காமல், நடைமுறையை பற்றி சிந்திக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அகழ்வாராட்சி என்று விஞ்ஞானமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் விரைவில் திருகோணமலைக்கு சென்று ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தவுள்ளதாக குறிப்பிட்டார்.

சரத் வீரசேகர எதிர்ப்பு

திருக்கோணேஸ்வர ஆலயம் தொடர்பான செய்தியை மறுக்கும் இலங்கை அரசாங்கம் | Trincomalee Thirukoneswara Temple

இதன்போது இந்த பேச்சுவார்த்தையில் தாமும் பங்கேற்கவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டபோது அதற்கு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எதிர்ப்பை வெளியிட்டார்.

கோயிலின்  நிர்வாகத்தினரை அழைத்து ஆளுநர் இந்த தீரமானத்தை எடுத்தநிலையில், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் பங்கேற்கவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து தமது கருத்தை வெளியிட்ட அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, பிரச்சினை இருக்குமாக இருந்தால் அதற்கு தீர்வு இருக்கவே வேண்டும். எனவே இது தொடர்பில் ஆராய்வோம் என்று குறிப்பிட்டார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US