திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து
திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் Trinco Petroleum Terminal (Pvt) Ltd ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்படும் 99 எண்ணெய்க் குதங்களையும் 827 ஏக்கர் காணியையும் மூன்றாகப் பிரித்து 50 வருடங்களுக்கு மூன்று நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Agreements to develop Trinco Oil Tank Farm signed this evening.
— Udaya Gammanpila (@UPGammanpila) January 6, 2022
Signatories were Treasury Secretary (for Gvt of Sri Lanka), Land Commissioner General, CPC, LIOC & Trinco Petroleum Terminal Ltd
85 of 99 tanks will be under Sri Lankan control which were under Indian control