ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளித்த திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) ஆதரித்து திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பினால் கிளைக்காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த காரியாலயம் இன்று (31.08.2024) திருகோணமலை அநுராதபுர சந்தியில் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரளவின் பங்கேற்புடன் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கட்சி ஆதரவாளர்கள்
இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பின் தலைவர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்திப் சமரசிங்க மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan