திருகோணமலையில் கடற்றொழிலாளர்கள் வீதியை மறித்து போராட்டம் (Photos)
திருகோணமலை மாவட்டத்தில் 176 பேருக்கு வழங்கப்பட்ட சுருக்கு வலை அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி வீதியை மறித்து கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் (13.09.2023) திருகோணமலை - சிறிமா பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் திருக்கடலூர் வழியாக ஏகாம்பரம் வீதியூடாக வந்து திருகோணமலை - கண்டி பிரதான வீதியிலுள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு வீதியில் அமர்ந்த வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரத்து செய்ய கோரிக்கை

கடல் வளம் அழிந்து போவதாகவும், கடற்றொழிலாளர்களின் தொழில் அற்றுப்போய் வருவதாகவும், அரச அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் தெரிந்திருந்தும் எதுவித சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam