திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமாரவின் நெறியாழ்கையின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இதன்போது மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பிலும் எதிர்கால திட்டங்கள் மற்றும் நிறை குறைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ணசேகர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன, உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், மாகாண பிரதம செயலாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

