திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Trincomalee Eastern Province Law and Order Court of Appeal of Sri Lanka
By Kiyas Shafe Jan 14, 2026 04:55 PM GMT
Report

திருகோணமலை கடற்கரை பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பௌத்த தேரர்கள் உட்பட 10 சந்தேக நபர்களையும், எதிர்வரும் 19ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்று (14.01.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். என். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஈரான் கிளர்ச்சி: என்ன நடந்தது..! CIA அனுப்பி வைத்த திருக்குரான் புத்தகங்கள்

ஈரான் கிளர்ச்சி: என்ன நடந்தது..! CIA அனுப்பி வைத்த திருக்குரான் புத்தகங்கள்

கரையோர பாதுகாப்பு திணைக்களம்

கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை நகர கடற்கரை பகுதியில் பௌத்த பிக்குகள் மற்றும் ஒரு குழுவினர் திடீரென ஒன்றுகூடி, விகாரை ஒன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர். அதனைத் தொடர்ந்து அங்கு புத்தர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Trincomalee Buddha Statue Issue

​கடற்கரை ஓரப்பகுதியானது கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்பதாலும், அங்கு கட்டுமானங்களை முன்னெடுக்க எவ்வித சட்டபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை என்பதாலும், இச்செயற்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பகுதியில் விகாரை அமைப்பதற்கு நகரசபை அல்லது கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் எவ்வித முன் அனுமதியும் கோரப்படவில்லை என விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Trincomalee Buddha Statue Issue

குறித்த இடம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமா என்பது குறித்து முன்னதாக பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதிலும், உரிய அனுமதியின்றி கடற்கரை எல்லைக்குள் எவ்வித கட்டுமானங்களையும் செய்ய முடியாது என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

​முன்னதாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றவும், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசாரணையின் போது, கரையோர பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியமை மற்றும் பொது அமைதிக்குத் பங்கம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் விடயங்களைச் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களின் பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அவர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையை சூழ்ந்துள்ள யுத்த மேகம் - தென்னிலங்கைக்கு ஆபத்தாகப் போகும் அமெரிக்காவின் முடிவுகள்

இலங்கையை சூழ்ந்துள்ள யுத்த மேகம் - தென்னிலங்கைக்கு ஆபத்தாகப் போகும் அமெரிக்காவின் முடிவுகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US