குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் பீ.சி.ஆர் பரிசோதனைகள்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினமும் திடீர் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாகவும் ,பொதுமக்கள் அலட்சியமாகவும் முகக்கவசம் இன்றியும் நடந்து கொள்வதை தடுக்கவுமே இப்படியான திடீர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இத் தீடீர் பரிசோதனை நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து சுமார் 100 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இத்திடீர் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பரிசோதனையின் முடிவில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும்
கிண்ணியாவில் கோவிட் தொற்று பிரதேசமாக கருதப்பட்டு முடக்கப்படலாம் என்று
எதிர்வு கூறப்படுகிறது.