ஹெரோயின் போதைப் பொருளுடன் முச்சக்கரவண்டி சாரதி கைது
ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் நேற்றிரவு (29) கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை-லல்லேன் பகுதியில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
குறித்த சந்தேகநபரை பின் தொடர்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்ட போது அவர் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரை சோதனையிட்டபோது 05 கிரேம் 50 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 2 கிரேம் 60 மில்லி கிரேம் ஜஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை லல்லேன் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபரின் முன் குற்றங்கள்
தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இன்றைய தினம் திருகோணமலை
நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.