விரைவில் போக்குவரத்து தடை நீக்கப்படும்! - அமைச்சர் நாமல்
எதிர்வரும் இரண்டு மாதங்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை விரைவில் நீக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் நாட்டை வழமைக்கு கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பித்துள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வந்த போதிலும் ஜனாதிபதியும். பிரதமரும் சவால்களை வெற்றிகொண்டு நாட்டை பாதுகாப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
