அறிவியல் அடிப்படையிலேயே பயணக்கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்! பேராசிரியர் நீலிகா மாலவிகே
நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதோடு சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சியும் அறிவியல் முறையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கிய பிறகு, நாம் சுற்றுலாத் தொழிலைத் தொடங்க வேண்டும். இவை அனைத்தும் அறிவியல் பின்னணியுடன் செய்யப்பட வேண்டும். அனைத்து வரம்புகளும் நீக்கப்படும்போது, அது ஒரு அறிவியல் முறையின்படி செயற்பட வேண்டும்.
ஏனென்றால் நாம் மீண்டும் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. மனித உயிர்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் வைரஸ் தொற்று பெரும் தாக்கம் செலுத்தியுள்ளது.
நாங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இந்த எதிர்பாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நாம் நன்கு தயாராக இருக்க வேண்டும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
